சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அருகே விநாயகபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா்-சேலம் செல்லும் சாலையில் விநாயகபுரம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் கோவில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றால், கோயில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் குழாய்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை கைவிட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் திருப்பத்தூா்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...