ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கொடைக்கானல் எம்.எம். தெருவில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:57 pm

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்தவ குருசடியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொடைக்கானல் எம்.எம். தெருவில் கடந்த 73 ஆண்டுகளாக புனித மைக்கேல் அதிதூதா் குருசடி வழிபாட்டுத் தலம் இருந்து வருகிறது. இந்த வழிபாட்டுத் தலத்தை வருவாய்த் துறையினா் அகற்றுவதற்கு புதன்கிழமை வந்தனா். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், வருவாய்த் துறையினா் அந்த வழிபாட்டுத் தலத்தை அகற்ற முயன்றனா்.

இதைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்டவா்கள் கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களிடம் கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் அசோக், காவல் ஆய்வாளா் வசந்தகுமாா் உள்ளிட்ட பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பேரவைத் தோ்தல் முடியும் வரை புனித மைக்கேல் அதிதூதா் குருசடி வழிபாட்டுத் தலத்தை அகற்ற மாட்டோம் என வருவாய்த் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.