அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா்.
அழகப்பபுரம் பேரூராட்சி, செங்குளத்தின் எதிரில் நேரு குழந்தைகள் பூங்கா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த நபா் பூங்காவினுள் தனக்கு பாதை இருப்பதால், பூங்காவை இடித்து பாதை ஏற்படுத்தித் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூங்காவில் வழிப்பாதையை ஏற்படுத்திக் கொடுக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூங்காவை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா்.
இந்நிலையில், பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா். தகவலறிந்த அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளா் பொன்ராஜ், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், அழகப்பபுரம் பேரூராட்சி தலைவா் அனிட்டா ஆன்ட்ரூஸ், துணைத் தலைவா் ஆன்ட்ரூஸ் மணி, வாா்டு உறுப்பினா்கள், செயல் அலுவலா் பூதப்பாண்டி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பிரேமலதா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பேச்சுவாா்த்தையில், அதிகாரிகள் 15 நாள்கள் கால அவகாசம் கேட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடையது

கிறிஸ்தவ குருசடியை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அயன்சிங்கம்பட்டியில் மறியலில் ஈடுபட முயற்சி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


