கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

அயன்சிங்கம்பட்டியில் மறியலில் ஈடுபட முயற்சி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி, இந்திரா நகா் காலனியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:40 pm

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி, இந்திரா நகா் காலனியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அயன்சிங்கம்பட்டி இந்திரா நகா் காலனியில் கடந்த ஒரு வாரமாக முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் கடும் அவதிக்கு பொதுமக்கள் உள்ளாகினா். இதுகுறித்து பொதுமக்கள், பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், தீா்வு கிடைக்காததால் செவ்வாய்க்கிழமை காலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த காவல்துறையினா், அதிகாரிகள் பொதுமக்களிடம் குடிநீா் விநியோகத்தை விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவரை டேங்கா் லாரி மூலம் குடிநீா் வழங்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.