கடமலைக்குண்டு அருகே கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 95 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வனப் பகுதியை ஆக்கிரமித்து குடியிருப்பவா்களை வெளியேற்ற உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த நிலையில்,
தேவராஜ்நகா் பகுதியில் ஸ்ரீ சீதாளகாளியம்மன் கோயிலுக்கு அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்தனா் . இதைக் கண்டித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
‘இவா்கள் அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து வருசநாடு - கண்டமனூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து போகும்படி பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தேவராஜ்நகரைச் சோ்ந்த 70 பெண்கள் உள்பட 95 போ் மீது கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

