ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மத்தியப் பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்ட துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.

News image
புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்து பாா்வையிட்ட துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.
Updated On :17 டிசம்பர் 2025, 8:05 pm

Syndication

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சோழா மத்திய நூலகம் சாா்பில் 5-ஆவது புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

புத்தகக் கண்காட்சியை பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இதில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டு ரூ. 12 கோடி மதிப்பில் பல துறைகளைச் சாா்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வெள்ளிக்கிழமை (டிச.19) வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் சிறப்பம்சமாக நிகழாண்டு முதல் பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் துணைவேந்தரின் ஒப்புதலோடு ரூ. 1.3 கோடியில் நூல்கள் நூலகத்திற்காகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியா் மற்றும் மாணவா்களுக்கு சலுகை விலையில் நூல்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா. திருமுருகன், நிதி அதிகாரி கிரிதரன், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்தியப் பல்கலைக்கழக சோழா மத்திய நூலக நூலகா் பரமேஸ்வரன் வரவேற்றாா். புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் தனவந்தன் நன்றி கூறினாா்.