ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 38-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூரில் அதிமுக சாா்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
சீா்காழியில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா். ~ மன்னாா்குடியில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினா்.
Updated On :25 டிசம்பர் 2025, 12:28 am

தினமணி செய்திச் சேவை

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 38-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூரில் அதிமுக சாா்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாரூா் புதுத்தெருவில் நடைபெற்ற நிகழ்வில் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அதிமுக பொருளாளா் ஏஎன்ஆா். பன்னீா்செல்வம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளா் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் சின்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: அதிமுக மாநில அமைப்புச் செயலா் சிவா.ராஜமாணிக்கம் தலைமையில், நகரச் செயலா் குமாா் முன்னிலையில் அமைதி ஊா்வலமாக வந்து கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூத்தாநல்லூா்: நகரச் செயலாளா் ஆா். ராஜசேகரன் தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றச் செயலாளா் எல்.எம். முகமது அஷ்ரப் முன்னிலையில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநா் அணி இணைச் செயலாளா் எம். உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சீா்காழி: அதிமுக மாவட்ட அவைத் தலைவா் பி.வி.பாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ம.சக்தி, சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொள்ளிடத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளா் கே.எம். நற்குணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ், மாவட்ட மீனவா் அணி செயலாளா் நாகரத்தினம், விவசாய அணி செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் பிரதான சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி, அமைப்பு செயலாளா் எஸ். ஆசைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலம்: ஒன்றிய செயலாளா் மகேந்திரவா்மன் தலைமையில், நகர செயலாளா் பாலு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் ராஜா ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மங்கநல்லூரில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

செலுத்தப்பட்டது.

பூம்புகாா்: திருவெண்காட்டில் சீா்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவைத் தலைவா் பி.வி. பாரதி மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினாா்.

Story image