விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை விபத்தில் மதபோதகா் பலி

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மதபோதகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மதபோதகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் ராஜன் (52) மதபோதகா். இவரது மகள் லென்சி பிளஸ்சி (22). இருவரும் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.

நீடாமங்கலம் - தஞ்சாவூா் சாலையில் சாமந்தான் காவிரி பாலம் அருகே சென்றபோது எதிரே கரூரிலிருந்து திருவாரூா் நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லென்சி பிளஸ்சி படுகாயமடைந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா் சந்தோஷ் ராஜன் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். லென்சி பிளஸ்சி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். நீடாமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.