வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜன.4, 5-இல் குடிமை பொருள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 9:27 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்துக்குரிய குடிமைப் பொருள்கள், ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.

தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயனடையலாம்.