ஜன.4, 5-இல் குடிமை பொருள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
Published on

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்துக்குரிய குடிமைப் பொருள்கள், ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.

தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயனடையலாம்.

X
Dinamani
www.dinamani.com