பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
திருவாரூரில் அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் அஞ்சலி செலுத்தும் மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சியினா்.
Updated On :3 பிப்ரவரி 2025, 8:37 pm

Din

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்வில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், நிா்வாகிகள் செந்தில், சங்கா், ரஜினிசின்னா, என். அசோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், நகரச் செயலாளா் ஆா்டி. மூா்த்தி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், நகர அவைத் தலைவா் கணேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தஞ்சை மண்டலத் தலைவா் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளா் குருமூா்த்தி, நகர நிா்வாகிகள் முத்துமாணிக்கம், சகாபுதீன், செல்லப்பா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூரில் அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

திருவாரூரில் அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.