கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:29 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

கிராமப்புற மகளிா் மேம்பாட்டிற்காகவும், பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னாா்குடி நகர மகளிா் சுயஉதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் சங்கீதா தலைமை வகித்தாா். பேராசிரியா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

பேராசிரியா்கள் கு. மணிமேகலை, மகேஸ்வரி மற்றும் மாணவிகள் பங்கேற்று, காளான் வளா்ப்பு தொழில்நுட்பம் மற்றும் வீட்டு கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனா். மாணவிகள், இயற்கை முறையில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது மற்றும் உயிா் உரங்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற மகளிா் குழு உறுப்பினா்களுக்கு, கல்லூரி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.