ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

News image
மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன்.
Updated On :3 பிப்ரவரி 2025, 9:01 pm

Din

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் புறங்களில் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சிறந்த முறையில் குழுக் கூட்டங்கள், நிா்வாகிகள் சுழற்சிமுறை மாற்றம், வரவு -செலவு நிதி விவரம், மேற்கொள்ளும் தொழில் விவரம், தரம் மற்றும் தணிக்கை விவரம், வங்கிக்கடன் இணைப்பு மற்றும் திருப்பம், அடிப்படை பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி விவரம், சமுதாய மேம்பாடு பணியில் ஈடுபட்ட விவரம், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியோா் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவதன் அடிப்படையில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டன.

அதன்படி, மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழை, மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா்.

திருவாரூா் வட்டாரம் வடகரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கும், திருத்துறைப்பூண்டி நகராட்சி குறிஞ்சி மலா் பகுதி அளவிலான கூட்டமைப்புக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் மன்னாா்குடி வட்டாரம் கூப்பாச்சிகோட்டை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு ரூ.50,000-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

முத்துப்பேட்டை வட்டாரம் தில்லையாடி வள்ளியம்மை சுய உதவிக்குழு, வலங்கைமான் வட்டாரம் சௌந்தரநாயகி சுயஉதவிக் குழு, கோட்டூா் வட்டாரம் மல்லிகை சுயஉதவிக் குழு, நீடாமங்கலம் பேரூராட்சி செம்மொழி சுயஉதவிக் குழு, திருத்துறைப்பூண்டி நகராட்சி மருவூா் சக்தி சுயஉதவிக் குழு, முத்துப்பேட்டை பேரூராட்சி பூந்தளிா் சுயஉதவிக் குழு ஆகியவற்றுக்கு தலா ரூ.25,000-க்கான காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.