காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

திருவாரூா் மாவட்ட புதிய ஆட்சியராக, வி. மோகனசந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 7:36 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட புதிய ஆட்சியராக, வி. மோகனசந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த தி. சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநராக இருந்த வி. மோகனசந்திரன் நியமிக்கப்பட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்னா், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலராகவும், முதல்வா் அலுவலகத்தில் துணை செயலாளராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், கடலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பணியிடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வருவாய்க் கோட்டாட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா்.