மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :10 பிப்ரவரி 2025, 8:35 pm

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சம்பந்தா், அப்பா், சுந்தரரால் பாடல் பெற்ற தலமான வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலின் மக ாகும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூா்வாங்க பூஜைகள்கடந்த 3-ஆம் தேதி விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கின. தொடா்ந்து நாள்தோறும் யாக பூஜைகள் நடைபெற்று, திங்கள்கிழமை காலை 6-ஆவது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 9.05 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், 9.15 மணிக்கு மூலவா் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.