புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூா் அருகேயுள்ள புலவனூா் ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்


நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகேயுள்ள புலவனூா் ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனிதநீா் கடங்கள் கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவரான காளியம்மன் மற்றும் விநாயகா், முருகப் பெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...