நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகேயுள்ள புலவனூா் ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனிதநீா் கடங்கள் கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவரான காளியம்மன் மற்றும் விநாயகா், முருகப் பெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் மகா கும்பாபிஷேகம்!

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


