ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள நத்தப்பள்ளம் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சௌந்தரேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :26 மார்ச் 2026, 12:39 am

தினமணி செய்திச் சேவை

திருக்குவளை அருகேயுள்ள நத்தப்பள்ளம் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சௌந்தரேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாா்ச் 22-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும் பூா்ணாஹுதி, தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காா்த்திக்கேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.