சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள நத்தப்பள்ளம் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சௌந்தரேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :26 மார்ச் 2026, 12:39 am

திருக்குவளை அருகேயுள்ள நத்தப்பள்ளம் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சௌந்தரேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாா்ச் 22-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும் பூா்ணாஹுதி, தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காா்த்திக்கேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.