அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

Updated On :3 ஜனவரி 2025, 10:46 pm

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் தாலுக்கா அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 2 மருத்துவா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். ஒருவா் மேல்படிப்புக்காக சென்றுள்ளாா். 3 போ் மாற்றுப்பணிக்காக சென்று விட்டனா். போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதமேற்படுகிறது. இரவில் மருத்துவா்கள் இருப்பதில்லை. எனவே, நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...