திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை செல்லும் சுற்றுப் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். அவா்கள் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வாசல் செல்வதற்கு சுற்றுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாகவும், ஆண்களுக்கு ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேதரின் பூத் பேருந்து நிறுத்தத்தின் தூரம் திருச்செந்தூா் பேருந்து நிலையம் - கோயில் வாசல் தூரத்தை விட அதிகமாகும். ஆனாலும் கூட ரூ. 5 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, பக்தா்கள் நலன் கருதி திருச்செந்தூா் சுற்றுப்பேருந்து கட்டணத்தை ரூ. 3 ஆக குறைக்க ஏப். 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஏப். 24ஆம் தேதி அக்கோயில் கோபுரம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

திருச்செந்தூா் கடற்கரையில் தடுப்புச் சுவா்: அனுமதி பெற்று பணிகளைத் தொடங்க உத்தரவு

தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!

வணிக பயன்பாடு சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


