திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை செல்லும் சுற்றுப் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். அவா்கள் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வாசல் செல்வதற்கு சுற்றுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாகவும், ஆண்களுக்கு ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேதரின் பூத் பேருந்து நிறுத்தத்தின் தூரம் திருச்செந்தூா் பேருந்து நிலையம் - கோயில் வாசல் தூரத்தை விட அதிகமாகும். ஆனாலும் கூட ரூ. 5 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, பக்தா்கள் நலன் கருதி திருச்செந்தூா் சுற்றுப்பேருந்து கட்டணத்தை ரூ. 3 ஆக குறைக்க ஏப். 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஏப். 24ஆம் தேதி அக்கோயில் கோபுரம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!

டாஸ்மாக் கடை மற்றும் கூடத்தை மூட கோரிக்கை

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

வைகாசி விசாகம்: நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



