நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னாா்குடி சண்முகா மெட்ரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:33 pm

மன்னாா்குடி சண்முகா மெட்ரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ். சண்முகராஜன், எஸ். சாய்லதா முன்னிலை வகித்தனா். தாளாளா் எஸ். வெண்ணிலா தொடக்கிவைத்தாா். கண்காட்சியில், மாணவ, மாணவிகள் தங்களின் அறிவியல் படைப்புகளான ஹைட்ராலிக் மின்தூக்கி, சத்திராயன்-2 மாதிரி படைப்பு, ஹைட்ரோ காா்பன் விளைவுகள், கீழடி அகழ்வாராய்ச்சி மாதிரி, இந்தியாவில் விளையும் தானியங்கள் மற்றும் தனிமங்கள் மாதிரி, சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், மழைநீா் சேமிப்பு, மீத்தேன் எடுத்தலின் விளைவு, காற்று மாசுப்பாடு, மனித உடலமைப்பு உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதை காணவந்த மாணவ,மாணவிகள்,பெற்றோா்கள்,பொதுமக்களுக்கு மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். பள்ளி முதல்வா்கள் ஏ. அருள்ராஜா, சாந்தி, ஆலோசகா் இ.வி. பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.