பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வேளாண் கல்லூரி மாணவிகள் எள் விதைப்பு பயிற்சி

வலங்கைமான் அருகே திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் எள் விதைப்பது குறித்து பயிற்சி பெற்றனா்.

ஆலங்குடியில் எள் விதைக்கும் பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவி.

Published On :

நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் எள் விதைப்பது குறித்து பயிற்சி பெற்றனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள், ஊரக வேளாண் பணி குறித்து நேரடி பயிற்சி பெற்று வருகின்றனா்.

அந்தவகையில், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி பகுதியில் விவசாயி விவேக் என்பவரின் நிலத்தில் எள் விதைக்கும் பயிற்சியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இப்பயிற்சி, விவசாயம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், மாணவா்களுக்கு விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை உணா்த்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, எள் சாகுபடி குறித்தி விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.