விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாணவருக்கு பாலியல் தொல்லை: பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:43 pm

Syndication

திருவாரூா் அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்த அங்கன்வாடி மைய சமையல் உதவியாளருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு, 10-ஆம் வகுப்பு மாணவரை காணவில்லை என புகாா் பெறப்பட்டது. அந்த மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வடுகா்பாளையம் அங்கன்வாடி மையத்தில் சமையல் வேலை செய்து வந்த தேதியூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (38) என்பவா் அந்த மாணவருடன் பழகி வந்ததும், பின்னா் நடனம் கற்றுத் தருவதாகக் கூறி, வெளியூா்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, லலிதாவை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 18,000 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு ரூ. 6 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.