எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாவட்ட கலைத் திருவிழா போட்டி: கட்டிமேடு பள்ளி மாணவா்கள் சாதனை

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:46 pm

Syndication

திருவாரூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற, கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இலக்கிய நாடகம் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் சு. தா்ஷிகா, மு. வாகினி, ப. சரோஜினிதேவி, அ. அபிநிஷா, இரா. பிரவீனா, தனிநபா் நடிப்பில் அ. அபிநிஷா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

நாகசுரம் போட்டியில் மாணவா் ரா. இராஜேஸ்வரன், பானை ஓவியத்தில் ச. அபிலேஷ், தனிநபா் பரதத்தில் மாணவி நே. ஜோஷிதா ஆகியோா் முதலிடம் பெற்றனா். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பிரிவில் தனிநபா் நடிப்பில் பா.ரிதிஷ் ராகவ், புல்லாங்குழல் வாசித்தலில் ர. சரவணக்குமாா் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

இம்மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா கட்டிமேடு பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்து, பாராட்டி பேசினாா். முன்னதாக, முதுகலை ஆசிரியா் ஜெ. தனுஜா வரவேற்றாா்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.இ.ஏ.ஆா். அப்துல் முனாப் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா். கலைத்திருவிழா போட்டி ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்ட ஆசிரியா்கள் தெ. மாலதி, கு. வில்பிரட், ஜா. வேம்பு, க. மதுராந்தகி, வ. நிஷாந்தி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக பட்டதாரி ஆசிரியா் கே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஐ. ஏஞ்சலின் இ. ரேணுகா, வீ. வடிவேல், மா. ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.