மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலைவாய்ப்பு மையத்தில் நவ.17 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நவ.17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:39 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நவ.17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2, 2 ஏ காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு, செப்.28-ஆம் தேதி நடைபெற்றது. தகுதி பெறுவோா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு தயாராகும் வகையில் விளமலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.17-முத்ல இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அனுபவம் பெற்ற பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சியளிப்பதுடன், பாடக்குறிப்புகளும் வழங்கப்படுகிறது. முதன்மைத் தோ்வுக்காக, மாதிரி எழுத்துத் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. எனவே, இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.