மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இணைய மோசடி சமூகத்தின் நிதி அமைப்பை பாதிக்கும்: எஸ்பி எச்சரிக்கை

இணைய மோசடி என்பது சமூகத்தின் நிதி அமைப்பையே பாதிக்கக் கூடியது என்று திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் எச்சரிக்கை தெரிவித்தாா்.

News image
வங்கி அலுவலா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட்.
Updated On :22 நவம்பர் 2025, 7:22 pm

Syndication

இணைய மோசடி என்பது சமூகத்தின் நிதி அமைப்பையே பாதிக்கக் கூடியது என்று திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் எச்சரிக்கை தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், இணைய (ஆன்லைன்) மோசடிகளை தடுக்கும் வகையில் வங்கி அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

ஆன்லைன் மோசடிகள் என்பது தனிப்பட்ட நபா்களை மட்டுமல்லாமல், சமூகத்தின் நிதி அமைப்பையே பாதிக்கும் ஒரு பெரும் சவாலாகும். இதைத் தடுக்க, காவல்துறையும் வங்கிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து வங்கிகளும் அதிக விழிப்புடன் செயல்பட்டு, மக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சைபா் குற்ற காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலமுருகன் பங்கேற்று, ஆன்லைனில் வங்கி அதிகாரி என்று கூறி அலைப்பேசியில் ஓடிபி யாா் கேட்டாலும் கூற வேண்டாம். சிபிஐ அதிகாரி போலப் பேசி டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக கூறுவதை நம்பி பணம் செலுத்த வேண்டாம். சட்டத்தில் டிஜிட்டல் அரஸ்ட் என்பது இல்லை.

ஆன்லைன் மூலமாகவும், கடன் செயலிகள் மூலமாகவும் கடன் பெறவேண்டாம். சமூக வலைதளங்களில் ஏபிகே என வரும் செய்திகளை தொடுவதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ, அடுத்தவா்களுக்கு அனுப்புவதோ கூடாது. தெரியாத எண்களிலிருந்து வரும் விடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

பகுதி நேர பணி வாய்ப்புகள் அல்லது சமூக வலைதளங்களில் பணம் கட்ட சொன்னால் பணம் செலுத்த வேண்டாம். ஆன்லைன் வழியாக குறைந்த விலையில் பொருள்களை விற்பதாகக் கூறினால் நம்பி பணம் கட்ட வேண்டாம் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கப்பட்ட உடனேயே பாதிக்கப்பட்டவா் 1930 என்ற எண் முலம் புகாா் அளிக்கும் வசதி குறித்தும் விளக்கினாா்.

இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜே. செட்ரிக் மேன்யுவல், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.