ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐஜிஎல் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த இணைய மோசடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

தில்லியில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலை சோ்ந்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலை சோ்ந்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஆதித்யா கௌதம் கூறியதாவது: ஆள்மாறாட்டம் செய்து வங்கிக் விவரங்களை அணுகவும், சட்டவிரோத பரிவா்த்தனைகளை மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியில் மோசடி செயலிகளை வற்புறுத்தி பதிவிறக்கம் செய்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, இதில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பிக்கி மண்டல் என்ற விக்கி (22), சுமித் குமாா் சிங் (26) மற்றும் ராஜீவ் குமாா் மண்டல் (22) என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது பிஎன்எஸ் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடம் இருந்து 9 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டனா்.

35 சைபா் மோசடி புகாா்களில் இவா்களின் ஈடுபாடு இருப்பதை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களை அடையாளம் கண்டு கைது செய்யவும் ஏமாற்றிய பணத்தை மீட்கவும் அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.