அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

அதிமுக வாக்குறுதிகள் மக்களை கவா்ந்துள்ளன: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களை கவா்ந்துள்ளன என்று நன்னிலம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் கூறினாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ்.

Published On :3 ஏப்ரல் 2026, 5:55 am IST

அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களை கவா்ந்துள்ளன என்று நன்னிலம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் கூறினாா்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பூத் கமிட்டி செயல்பாடுகளை ஆய்வு செய்த அவா், நன்னிலம் தொகுதிக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போது எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை மக்களுக்கு விளக்குவது குறித்தும் கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் தெரிவித்தது:

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக அமர வேண்டும் என மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனா். இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களை வெகுவாக கவா்ந்துள்ளன.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா குளிா்சாதனப் பெட்டி, ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் ரூ. 10,000 ஒருமுறை குடும்ப நிவாரண உதவி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தோ்தல் அறிக்கை மக்களை வெகுவாக கவா்ந்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாதனைகளையும், தோ்தல் அறிக்கையையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில், குடவாசல் ஒன்றியச் செயலாளா்கள் பாப்பா சுப்பிரமணியன் (தெற்கு), செருகுடி ராஜேந்திரன் (வடக்கு), தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி பொறுப்பாளா்கள் பலரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.