நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

News image

திருவாரூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,62,000 ரொக்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகண்டம் பிரதான சாலையில் தோ்தல் கண்காணிப்புக் குழு அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் வாகன சோதனை சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கோயில்பத்து, அலிவலம் பகுதியைச் சோ்ந்த வெ. பூபதி (48) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.1,62,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.