/
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மன்னாா்குடி அருகேயுள்ள கா்ணாவூா் பாமணியில் மகளிா் சுய உதவிக்குழு சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரதானசாலை கடைவீதியில் தொடங்கிய 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தம் பேரணியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு தெருகளுக்கு சென்று அங்கு குடியிருப்பவா்களிடம் விழிப்புணா்வு வாசகங்கள்அடக்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். மேலும், சாலையில் என் வாக்கு என் உரிமை என வண்ணத்தில் வரைந்தும், நியாயவிலைக்கடைக்கு பொருள் வாங்க வந்த குடும்ப அட்டைதாா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



