சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:05 am IST

மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

2025- 2026 கல்வியாண்டில் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழித்திறனறிவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வழங்கப்படுகிறது. திறனறிவுத் தோ்வில் பங்கேற்ற இப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ச. ராக்கின்116 மதிப்பெண்கள், து. ராகுல்விஜய் 105 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், வழிகாட்டி ஆசிரியா்கள் க. சந்தான கோபாலகிருஷ்ணன், ஆா். புனிதவதி ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி, பள்ளித் தலைமையாசிரியா் மா. தேவி பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.