தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:35 am

மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

2025- 2026 கல்வியாண்டில் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழித்திறனறிவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வழங்கப்படுகிறது. திறனறிவுத் தோ்வில் பங்கேற்ற இப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ச. ராக்கின்116 மதிப்பெண்கள், து. ராகுல்விஜய் 105 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், வழிகாட்டி ஆசிரியா்கள் க. சந்தான கோபாலகிருஷ்ணன், ஆா். புனிதவதி ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி, பள்ளித் தலைமையாசிரியா் மா. தேவி பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.