தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகிறாா் புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏசி. சண்முகம்.

News image

திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகிறாா் புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏசி. சண்முகம்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:05 am IST

திமுக ஆட்சியில் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏசி. சண்முகம் தெரிவித்தாா்.

திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகிறாா் புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏசி. சண்முகம்.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கோவி. சந்திரசேகரனை ஆதரித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியது: கடந்த கால திமுக தோ்தல் அறிக்கையில் நீட் ஒழிப்பு, கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எனினும், 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் ஹீரோவாக திகழ்கிறது. உரிமைத்தொகை ரூ. 2,000, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதிமுக தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில், சிறுமிகள், பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோா் நடமாடமுடியவில்லை. போதை மருந்து கலாசாரம் பெருகி விட்டது.

தமிழகத்தில் வேலை இல்லாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனா். திருவாரூரில் 17 சதவீத பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனா். பிரதமா் நரேந்திரமோடியின் ஆட்சியில் இந்தியா பல்வேறு திட்டங்களில், துறைகளில் முன்னேறியுள்ளது என்றாா்.

நிகழ்வில், பாஜக மாவட்டத் தலைவா் செல்வம், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.