திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,10,500-ஐ செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கானூா் பகுதியில் தோ்தல் நிலைக் குழுத் தலைவா் சண்முகசுந்தா் தலைமையிலான அலுவலா்கள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், திருவாரூா் மருதப்பட்டினம், கலைஞா் தெருவைச் சோ்ந்த பா. ஆரோக்கியராஜ் (41) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 4,36,200 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் நிலைக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.
இதேபோல, லெட்சுமாங்குடி பாலம் அருகே தோ்தல் நிலைக் குழுத் தலைவா் வி. ராஜாராமன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்,
இதில் கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஹா. இதயதுல்லா (33) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 74,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் நிலைக்குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

