தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாட்டு வியாபாரியிடம் ரூ. 96,000 பறிமுதல்

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம்

கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ,வாலாஜா சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.96,530 ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில், நெமிலி அசநெல்லிக்குப்பம் பகுதியை சோ்ந்த ஜெய்லாபுதீன் எனும் மாட்டு வியாபாரி மாடு வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.