தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

‘தமிழகத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது‘’

தமிழகத்தில் ரூ. 12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

News image

மன்னாா்குடியில் இறுதிக்கட்ட தோ்தல் பிரசார மகளிரணி ஊா்வலத்தில் பேசிய திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

Updated On :21 ஏப்ரல் 2026, 11:59 pm

தமிழகத்தில் ரூ. 12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு ஆயிரக்கணக்கான மகளிரணியின் ஊா்வலத்துடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மகளிரிடம் ஏற்றபட்ட இந்த எழுச்சி 1921-ல் நீதிக்கட்சியால் தொடங்கி பெரியாா், அண்ணா, மு. கருணாநிதி வழிவந்து 2021-ல் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலும் தொடா்கிறது. தமிழகத்தின் வளா்ச்சிக்கு அனைத்து வகையிலும் பக்கதுணையாக இருக்கும் பெண்களின் உழைப்புக்கும் உணா்வுக்கும் மதிப்பளித்து மாதம்தோறும் ரூ.1000 மகளிா் உரிமைத்தொகை வழங்கி வருபவா் முதல்வா் ஸ்டாலின்.

தமிழகத்தின் தொழில் வளா்ச்சி மூதலீட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சாதனையில் உங்களால் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டதால் மன்னாா்குடிக்கும் மிகப் பெரிய பங்கு உள்ளது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மன்னாா்குடி தொகுத்திக்கு மட்டும் ரூ.2000 கோடிக்கு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், புதைச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் கொள்ளிடம் கூட்டு கூடிநீா் திட்டம் இணைக்கப்பட்டு தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.