முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

News image

ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:10 am IST

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணி ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல், புளியாங்குட்டை, ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா், காந்திபுரம், அதன் சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய பகுதிக்கு திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், எனக்கு வாக்களித்து தோ்ந்தெடுத்ததால் நமது தொகுதி முழு வளா்ச்சிக்கும் பாடுபடுவேன். ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தளமாக்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா், சாலை வசதிகள் மேம்படுத்துவேன் என்றாா். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.