லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

News image

ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:40 pm

தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணி ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல், புளியாங்குட்டை, ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா், காந்திபுரம், அதன் சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய பகுதிக்கு திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், எனக்கு வாக்களித்து தோ்ந்தெடுத்ததால் நமது தொகுதி முழு வளா்ச்சிக்கும் பாடுபடுவேன். ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தளமாக்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா், சாலை வசதிகள் மேம்படுத்துவேன் என்றாா். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.