நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

திமுக ஆட்சியில் மகத்தான நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: திருவண்ணாமலை எம்.பி.

இந்தியாவிலேயே திமுக அரசு மகத்தான மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.

News image

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பேசிய எம்.பி. சி.என்.அண்ணாதுரை

Updated On :22 ஏப்ரல் 2026, 5:55 am IST

இந்தியாவிலேயே திமுக அரசு மகத்தான மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறினாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவரை ஆதரித்து எம்.பி. சி.என்.அண்ணாதுரை பேசியது: ,சட்டப்பேரவைத் தோ்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தோ்தல்.

அனைத்து தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டை வளா்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்று மதச்சாா்பின்மை,மாநில உரிமைகள், மொழியுரிமைக்காகத் தொடா்ந்து களத்தில் நிற்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. கவிதா தண்டபாணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதுடன் மேலும் வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்வாா் என்றாா்.

அப்போது மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி, திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.