அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

திருவாரூா் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடிகள்

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Published On :23 ஏப்ரல் 2026, 5:18 am IST

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,271 வாக்குச்சாவடிகள்: திருவாரூா் 327, திருத்துறைப்பூண்டி (தனி) 293, மன்னாா்குடி 307, நன்னிலம் 344 என 1,271 வாக்குச் சாவடிகள் தயாா்நிலையில் உள்ளன. இதில், 54 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருவாரூா் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 392, விவிபேட் 425), திருத்துறைப்பூண்டி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 351, விவிபேட் 380), மன்னாா்குடி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 368, விவிபேட் 399), நன்னிலம் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 412, விவிபேட் 447) என வாக்குப்பதிவுக்கென 4,697 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: இதனிடையே, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.