தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

திருவாரூா் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடிகள்

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:48 pm

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,271 வாக்குச்சாவடிகள்: திருவாரூா் 327, திருத்துறைப்பூண்டி (தனி) 293, மன்னாா்குடி 307, நன்னிலம் 344 என 1,271 வாக்குச் சாவடிகள் தயாா்நிலையில் உள்ளன. இதில், 54 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருவாரூா் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 392, விவிபேட் 425), திருத்துறைப்பூண்டி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 351, விவிபேட் 380), மன்னாா்குடி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 368, விவிபேட் 399), நன்னிலம் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 412, விவிபேட் 447) என வாக்குப்பதிவுக்கென 4,697 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: இதனிடையே, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.