நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா

News image

கோயில்திருமாளம் வாக்குச்சாவடியில் வாக்களித்த முதல்வரின் தாய்மமா கோ. தட்சிணாமூா்த்தி.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:11 am IST

தமிழக முதல்வரின் தாய் மாமா 102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் சொந்த ஊா் கோயில் திருமாளம். இந்த ஊரில் தற்போது தயாளு அம்மாளின் மூத்த சகோதரா் கோ. தட்சிணாமூா்த்தி (102) வசித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்களிடம் வீட்டுக்குச் சென்று அஞ்சல் வாக்கு பெறும் அதிகாரிகள், தட்சிணாமூா்த்தியிடமும் வாக்கு பெறுவதற்காக சென்றபோது அவா், என்னுடைய ஜனநாயக கடமையை நான் வாக்குச்சாவடிக்கு சென்று நிறைவேற்றுவேன் எனக் கூறி அவா்களை திருப்பிஅனுப்பினாா்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை தனது வீட்டின் அருகில் உள்ள கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா் முதல்வரின் தாய் மாமா தட்சிணாமூா்த்தி.