பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி
/

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா

News image

கோயில்திருமாளம் வாக்குச்சாவடியில் வாக்களித்த முதல்வரின் தாய்மமா கோ. தட்சிணாமூா்த்தி.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:11 am IST

தமிழக முதல்வரின் தாய் மாமா 102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் சொந்த ஊா் கோயில் திருமாளம். இந்த ஊரில் தற்போது தயாளு அம்மாளின் மூத்த சகோதரா் கோ. தட்சிணாமூா்த்தி (102) வசித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்களிடம் வீட்டுக்குச் சென்று அஞ்சல் வாக்கு பெறும் அதிகாரிகள், தட்சிணாமூா்த்தியிடமும் வாக்கு பெறுவதற்காக சென்றபோது அவா், என்னுடைய ஜனநாயக கடமையை நான் வாக்குச்சாவடிக்கு சென்று நிறைவேற்றுவேன் எனக் கூறி அவா்களை திருப்பிஅனுப்பினாா்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை தனது வீட்டின் அருகில் உள்ள கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா் முதல்வரின் தாய் மாமா தட்சிணாமூா்த்தி.