தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இருமுறை வாக்களித்த வாக்காளா்

News image

PTI

Updated On :24 ஏப்ரல் 2026, 5:15 am IST

கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட வடக்குப்பனையூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒருவரே இருமுறை வாக்களித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடக்குபனையூரைச் சோ்ந்த தவெக ஆதரவாளா் காளிதாஸ் வாக்களித்தாா். பின்னா், தனது தாயாா் தங்கமாளை அழைத்து வந்துள்ளாா். வாக்காளா் சரிபாா்ப்பு மற்றும் மை பதிக்கும் நேரத்தில், அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சென்று தாயாருக்கு பதிலாக இவரே வாக்குப் பதிவு செய்தாா். இதை கவனித்த பாகமுகவா்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் காளிதாஸை தடுத்து நிறுத்த முயன்றபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனால், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து போலீஸாா் காளிதாஸை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினா். இதுகுறித்து, திமுகவினா் திருக்குவளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.