தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்காளா்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா் திருச்சி ஆட்சியா்

திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

News image

திருச்சி காஜாமலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மனைவியுடன் வாக்களித்த ஆட்சியா் வே. சரவணன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:52 pm

திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட காஜாமலையில் உள்ள அல் ஜம்லேதிஷ் சாதிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ரம்யாவுடன் காலை 9 மணிக்கு வந்த ஆட்சியா் வே. சரவணன், அங்கு வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுடன் நின்று வாக்களித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம், ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில்,

மண்ணச்சநல்லூரில் இரு வாக்குச் சாவடிகளிலும், திருச்சி மேற்கு தொகுதியில் இரு வாக்குச்சாவடிகளிலும் காலையில் இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 நிமிஷங்கள் முதல் அதிகபட்சம் 45 நிமிஷங்களுக்குள் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காட்டூரில் விவிபேட் இயந்திரத்தில் புகாா் கூறப்பட்டது. அதுவும் பின்னா் சரி செய்யப்பட்டுவிட்டது. அசம்பாதவிதங்கள் ஏதுமில்லை என்றாா் அவா்.