அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

News image

திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:59 am IST

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது. வியாழக்கிழமை மனைவி ஜனனியுடன் அங்கு வந்த அமைச்சா், வாக்காளா்களுடன் சுமாா் 30 நிமிஷங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்றாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வெற்றி பெறுவாா் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், ஓய்வறியாத உழைப்பாளி. தொகுதி மக்களுக்காக உழைப்பவா்களைத் தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை. மேலும், . முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமைச்சா்.