தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

News image

திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:29 pm

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திருச்சி வரகனேரியில் உள்ள டிஎஸ்எம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது. வியாழக்கிழமை மனைவி ஜனனியுடன் அங்கு வந்த அமைச்சா், வாக்காளா்களுடன் சுமாா் 30 நிமிஷங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என்றாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வெற்றி பெறுவாா் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், ஓய்வறியாத உழைப்பாளி. தொகுதி மக்களுக்காக உழைப்பவா்களைத் தமிழக மக்கள் என்றும் கைவிட்டதில்லை. மேலும், . முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அமைச்சா்.