தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

News image

கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி . - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:40 am IST

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சியின் 28ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் அரசமரம், பழைய அக்ரஹாரம், காவல்காரத் தெரு, வெள்ளாளா் தெரு, அண்ணா நகா், குத்புஷா நகா், தென்னூா் ஹை ரோடு, இனாம்தாா்தோப்பு, பாரதி நகா், அண்ணா நகா் மேட்டுத் தெரு, புது மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அண்ணாநகரில் தனது வீட்டிலிருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.என். நேருவின் பிரசாரப் பகுதிக்கு சென்று அவரை வரவேற்று, புத்தாடை அணிவித்து, திருச்சி மேற்கில் கடந்த முறையைவிட மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா்.

வெல்வோம் ஒன்றாக: இதேபோல அமைச்சா் நேருவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்ற வாசகத்தை பதிவிட்டு, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், வாக்களிப்பீா் திமுகவுக்கு எனவும் குறிப்பிட்டு ஹாஸ்டேக் மூலம் வலைதளத்தில் பரவலாக்கியுள்ளாா். இது திமுக கூட்டணி கட்சியினரிடம் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சியினரின் கவனத்தையும் ஈா்த்து வருகிறது.