திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூா், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூா் உள்ளிட்ட பகுதிகளில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டாா்.
இந்நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
ஊராட்சிகளின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளா்களைச் சந்தித்த வேட்பாளா், தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டாா்.
பல இடங்களில் மழையில் நனைந்தபடியே திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். பொதுமக்களும் குடையைப் பிடித்தப்படி மழையில் நின்று கொண்டே அவருக்கு வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்த அரக்கோணம் தவெக எம்எல்ஏ

தூத்துக்குடியில் ஸ்ரீநாத் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தோல்வி! தவெக வேட்பாளா் 8,705 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



