சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

Updated On :10 மே 2026, 1:35 am IST

திருவெறும்பூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூா், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூா் உள்ளிட்ட பகுதிகளில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டாா்.

இந்நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ஊராட்சிகளின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாக்காளா்களைச் சந்தித்த வேட்பாளா், தனக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குத் தனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டாா்.

பல இடங்களில் மழையில் நனைந்தபடியே திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். பொதுமக்களும் குடையைப் பிடித்தப்படி மழையில் நின்று கொண்டே அவருக்கு வரவேற்பு அளித்தனா்.