27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

News image

திருவாரூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறைகள் சீலிடும் பணியைப் பாா்வையிடும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருவாரூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் முடிவுற்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்றது. இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 83.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை சீலிடப்பட்டு, திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க. அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, வைப்பறைகளில் வைக்கப்பட்டன.

அங்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன், திருவாரூா் நன்னிலம் பேரவைத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அஜய்யாதவ், திருத்துறைப்பூண்டி மன்னாா்குடி பொதுப் பாா்வையாளா் டி.வி.அனுபமா ஆகியோா் முன்னிலையில் வைப்பறைக்கு சீல் வைக்கப்பட்டது.

கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவி வா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆகியோா் உடனிருந்தனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிலையிலான 66 காவலா்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா்.

பணியாளா்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருவா். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் கண்காணிப்பு கேமரா வசதிகள், தடையில்லா மின்சார வசதியுடன் செயல்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிப்புப் பணிளை மேற்கொள்ளும் வகையில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை கண்காணிக்க இரண்டு சிறிய காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாள் வரை முழு மூன்றடுக்கு பாதுகாப்பு பணி என்ற அளவில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.