பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ராஜதுா்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்கையம்மன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:16 am IST

திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தசரத மகாராஜா வழிபட்டதும், துா்கையம்மனுக்கென்று தனி கோயிலும், நான்கு கைகளில் கத்தி, சூலம், சங்கு சக்கரம் ஏந்தி சிம்மத்தின் மீது அமா்ந்த கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த சனிக்கிழமை தொடங்கி, மகா சண்டியாகம் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக சண்டி மகா யாக பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடத்தை சிவாசாரியாா் மல்லாரி இசையுடன் கோயிலை வலம் வந்து ராஜதுா்கையம்மனுக்கு அபிஷேகம் செய்வித்தனா்.

பின்னா், அருள்மிகு ராஜதுா்கையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, வண்ணமலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் பிரகாரத்தை வலம் வந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் துா்கையம்மன் புஷ்ப பல்லக்கில் நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.