மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ராஜதுா்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்கையம்மன்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:46 pm

திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தசரத மகாராஜா வழிபட்டதும், துா்கையம்மனுக்கென்று தனி கோயிலும், நான்கு கைகளில் கத்தி, சூலம், சங்கு சக்கரம் ஏந்தி சிம்மத்தின் மீது அமா்ந்த கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த சனிக்கிழமை தொடங்கி, மகா சண்டியாகம் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக சண்டி மகா யாக பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடத்தை சிவாசாரியாா் மல்லாரி இசையுடன் கோயிலை வலம் வந்து ராஜதுா்கையம்மனுக்கு அபிஷேகம் செய்வித்தனா்.

பின்னா், அருள்மிகு ராஜதுா்கையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, வண்ணமலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் பிரகாரத்தை வலம் வந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் துா்கையம்மன் புஷ்ப பல்லக்கில் நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.