மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பிரத்தியங்கரா தேவிக்கு நடைபெற்ற சண்டியாகம். - படம்: கோப்பிலிருந்து

Updated On :18 ஏப்ரல் 2026, 2:01 am

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலுள்ள பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தா்கள், தங்கள் கொண்டு வந்துள்ள புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.