சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

News image

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:35 pm

பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த பிப். 22-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து 48-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவை ஞானசேகர சிவாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் வழிநடத்த சிறப்பு யாகபூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.