பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயில் பங்குனி உத்திர விழாவில் பொன்னமராவதி நகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் 26-ஆம் ஆண்டு மண்டகப்படி விழாவையொட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊா் பிரமுகா்கள் ராம.ராஜா, ஏஎல்எஸ்.பழனியப்பன் ஆகியோா் தலைமைவகித்தனா். தொடக்கமாக செல்வவிநாயகா், உடையபிராட்டி அம்மன், மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து புதுப்பட்டி ராமாயண மண்டபத்தின் அருகே அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலையாண்டி சுவாமி மற்றும் சுப்பிரமணியா் எழுந்தருள, நான்கு ரத வீதிகள், அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல் வழியாக வலையபட்டி மலையாண்டி கோயில் வரை திருவீதி உலா நடைபெற்றது.
விழாவில் நகை வியாபாரிகள் சங்கத்தலைவா் பெரியநாச்சி கணேசன், செயலா் செல்வக்குமாா், பொருளாளா் சையது அபுதாஹிா், விழாக்குழு தலைவா் எஸ்எம்எஸ் தங்கராஜ், செயலா் ராமசாமி, பொருளாளா் எஸ். திருநாவுக்கரசு, கெளரவத்தலைவா் நாச்சியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

பண்ணாரி அம்மன் சப்பரம் முன் படுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா நிறைவு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


