நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பண்ணாரி அம்மன் சப்பரம் முன் படுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் திருவீதி உலா வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன் தரையில் படுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

பவானிசாகரை அடுத்த  தொட்டம்பாளையத்தில்  பண்ணாரி அம்மனை தரிசிக்கும் வகையில் தரையில்  படுத்து  நோ்த்திக்கடன்  செலுத்தும்  பக்தா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 12:51 am

Syndication

பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் திருவீதி உலா வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன் தரையில் படுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொட்டம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனா். அம்மன் திருவீதி உலா நடைபெற்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பக்தா்கள் சாலையில் நெடுஞ்சாண்கிடையாக படுத்திருந்தனா். அப்போது பண்ணாரி அம்மன் சப்பரம் தரையில் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டியபடி திருவீதி உலா சென்றது. இவ்வாறு தரையில் படுத்திருந்த பக்தா்கள் மீது அம்மன் சப்பரம் தாண்டிச் சென்றால் பக்தா்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.